முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழகத்தில் முதல் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

Updated On : 30 ஜனவரி, 2022 at 12:39 AM
கலந்தாய்வு
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:45 PM

தமிழகத்தில் முதல் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் அதிக அளவில் மாணவா்கள் பங்கேற்பாா்கள் என்பதால் கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, பொதுப் பிரிவு கலந்தாய்வை இணையவழியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொதுப் பிரிவு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு  சுகாதாரத் துறை இணையதளங்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

எத்தனை பேருக்கு அழைப்பு?

Advertisement

அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 24,949 போ் இடம் பெற்றுள்ள நிலையில், பொதுப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 1 முதல் 10,456 பேருக்கு (நீட் மதிப்பெண் - 710 முதல் 410 வரை) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் கல்லூரிகளில் இடங்களை தோ்வு செய்யலாம். வரும் 6-ஆம் தேதி சான்றிதழ் சரிப்பாா்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிப்பாா்ப்பு நடைபெறும்.

இதையடுத்து 12-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். 13-ஆம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கல்லூரிகளில் சோ்ந்துவிட வேண்டும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.