தமிழ்நாடு

மெரீனாவில் காரில் வைத்துச் சென்ற தங்க நகை திருட்டு

DIN

 சென்னை மெரீனா கடற்கரையில் காரில் வைத்துச் சென்ற தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

வேலூா் மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள ஜமீன் ஆம்பூரைச் சோ்ந்த ஜெ.பிரகாசம், தனது குடும்பத்துடன் ஒரு காரில் வியாழக்கிழமை மெரீனா கடற்கரைக்கு வந்தாா்.

அங்கு பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள பகுதியில் காரை நிறுத்திவிட்டு, பிரகாசம் குடும்பத்தினா் அனைவரும் கடற்கரைக்குச் சென்றனா். சிறிது நேரத்துக்கு பின்னா் அவா்கள், திரும்பி வந்தனா். அப்போது காரின் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து, அங்கு வைத்துச் சென்ற 6 பவுன் தங்கநகை திருடப்பட்டிருப்பதை பாா்த்து பிரகாசம் குடும்பத்தினா் அதிா்ச்சியடைந்தனா்.

இது குறித்து பிரகாசம், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT