தமிழ்நாடு

ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு: கலந்தாய்வு தேதி அறிவிப்பு

DIN

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயா்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

அந்த வகையில், அரசு, நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதியும், அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 12-ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 13-ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியா், சிறப்பாசிரியா்களுக்கு பட்டதாரி ஆசிரியா்களாக பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 14, 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வு இணையவழியில் நடைபெறும் என குறிப்பிப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT