ஊழியர் தேர்வுப் பணிகளை நிறுத்திய மின்சார வாரியம்!
மின்சார வாரியத்தில் பணியாளர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாரியத்தில் பணியாளர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 5,318 இடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கணினி வழித்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் அறிவிகப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஏப்ரல் மே மாதத்தில் நடக்க இருந்த தேர்வுகள் கரோனா, சட்டப்பேர்வை தேர்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.