தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலையை திறந்துவைத்தார் முதல்வர் 

திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். 

DIN

திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். 

திருவண்ணாமலையில் வேலூா் சாலையில் புதிதாக அண்ணா நுழைவு வாயில் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு 8 அடி உயரம் கொண்ட வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அண்ணா நுழைவாயிலையும், கருணாநிதி சிலையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். முன்னதாக கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியையும் அவர் தொடக்கிவைத்தார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசு, திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT