தமிழ்நாடு

ஷின்சோ மறைவு: தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து

ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

DIN

ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவரது கழுத்து மற்றும் தோள்பட்டை எலும்புப் பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. 

அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதே, மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அபேவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், அவர் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தேசியக் கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT