தமிழ்நாடு

கீழடி அகழ் வைப்பகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய்தார்.

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களிலும் 8-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களை காட்சிப்படுத்துவதற்காக கொந்தகை வருவாய் கிராமத்துக்குள்பட்ட பகுதியில் ரூ.11.03 கோடியில் அகழ் வைப்பகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உலக தரத்தில் நவீன வசதிகளுடன் 31919 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த அகழ் வைப்பகத்தில் நிர்வாக கட்டடம், கல் தொல் பொருள் காட்சிக் கூடம், உலோக தொல்பொருள் காட்சிக் கூடம், திறந்தவெளி அரங்கம், மணிகள் மற்றும் தொல்பொருட்கள் காட்சிக் கூடம், விலங்குகள் குறித்த தொல்பொருள் காட்சிக் கூடம், சுடுமண் பானைகள் தொல்பொருள் காட்சிக் கூடம் என தனித்தனியே அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று இன்னும் ஓரிரு வாரங்களில் திறக்கப்பட உள்ளன.

அமைச்சர் எ.வ.வேலுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்எல்ஏ தமிழரசிரவிக்குமார் உள்ளிட்டடோர்.

இந்நிலையில், தமிழகப் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு புதன்கிழமை பார்வையிட்டார்.

அவருடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்எல்ஏ தமிழரசிரவிக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT