சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், இந்தப் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது
மேலும், விண்ணப்பித்தவர்கள் வேறு விதமான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்றும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளது.