தமிழ்நாடு

நன்னிமங்கலம் மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் ஆனி மாத பெளர்ணமி வழிபாடு!

DIN

திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர்  திருக்கோயிலில் ஆனி மாதப் பெளர்ணமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

குபேர பெருமானின் குமாரர்கள் மணிக்ரீவன், நளகூபன்  ஆனி மாதப் பெளர்ணமியன்று  இறைவன் - இறைவியை வழிபட்டு, பொன் வில்வ சாரத்தின் மகிமையை உணர்ந்தது இத்திருக்கோயிலில் தான். மேலும் குபேர பெருமானும் இக்கோயில் இறைவனை வழிபட்டுள்ளார்.

பணம், நகைகள் மீதான தோஷங்களை நீக்கி, செல்வ வளத்தை பெருக்கும் பரிகாரத்தலமான இக்கோயிலில் ஆனி மாதப் பெளர்ணமி நாளான புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, அருள்மிகு சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன், குபேரப் பெருமானின் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரத்துக்குப் பிறகு தீப ஆராதனைகள் காட்டப்பட்டன.

இந்த பெளர்ணமி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் என்.சியாமளா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT