சென்னை: பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் அவரது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என சுட்டுரையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு முதல்வர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.