சென்னை: குரங்கு அம்மை நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அங்கு குரங்கு அம்மை பாதித்த நபருடன் தொடா்பில் இருந்ததால் இவரும் குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளானாா்.