தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல்

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

துபையில் இருந்து கடந்த 14-ஆம் தேதி சென்னை வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணி என்பவரிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து விசாரணை நடத்தியதில், ஆசன வாயில் மறைத்து எடுத்து வந்த 1.25 கிலோ எடை கொண்ட தங்கப்பசையை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.55.38 லட்சம் ஆகும்.

இதேபோல துபையில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த தமீம் அப்துல் ரஹ்மான், திருச்சியைச் சேர்ந்த முகமது ஹபீபுல்லா என்னும் இரண்டு பயணிகளிடம் நடத்திய விசாரணையில், ஆசன வாயில் மறைத்து எடுத்து வந்த 1.425 கிலோ தங்கப்பசை, தங்கச் சங்கிலிகள், சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்து எடுத்து வந்த மின்னணு பொருட்கள், குங்குமப்பூ, சிகரெட்டுகள் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர். 

தங்கத்தின் மதிப்பு ரூ.62.81 லட்சம். மற்ற பொருட்களின் மதிப்பு ரூ. 18.97 லட்சம். இதையடுத்து மூன்று பயணிகளும் கைது செய்யப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT