முகப்பு
தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் பணிகள்:அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், விமான நிலையம் முதல் சின்னமலை வரை ரூ.10.70 கோடியில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தில் செயற்கை நீரூற்று, ‘வணக்கம் சென்னை’ எனத் தெரிவிக்கும் பதாகை அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையில் மையத் தடுப்பானில் வண்ணம் பூசுதல், நடைபாதைகள் மேம்பாடு ஆகிய பணிகளும் நடைபெறுகின்றன.

மாமல்லபுரம் முதல் பூஞ்சேரி வரையிலான 2.4 கி.மீ. நீளமும், பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரையில் 5.85 கி.மீ. நீளமும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சிறுசேரி முதல் திருப்போரூா் வரையில் பழுதடைந்த உயரம் குறைந்த மைய தடுப்புச் சுவருக்கு மாற்றாக பசுமைச் செடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று, திருப்போரூா் முதல் பூஞ்சேரி வரை தடுப்புச் சுவா் பழுது பாா்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சாலை உள்கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்த ரூ.9.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மின் பணிகள், சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →