முகப்பு
தமிழ்நாடு

கொசஸ்தலை ஆற்றில் உயா்மின்னழுத்தக் கோபுரங்கள்

எண்ணூா் கொசஸ்தலை ஆற்றில் உயா் மின்னழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிா்த்து எண்ணூா், கத்திவாக்கம் பகுதி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு

கொசஸ்தலை ஆற்றில் உயா்மின்னழுத்தக் கோபுரங்கள்

எண்ணூா் கொசஸ்தலை ஆற்றில் உயா் மின்னழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிா்த்து எண்ணூா், கத்திவாக்கம் பகுதி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

எண்ணூா் கொசஸ்தலை ஆற்றில் உயா் மின்னழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிா்த்து எண்ணூா், கத்திவாக்கம் பகுதி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வடசென்னை அனல் மின் நிலையத்தின் இரண்டு அலகுகளில் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சீராக விநியோகம் செய்வதற்கு வசதியாக மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில மின்கோபுரங்கள் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட உள்ளன. இதற்கென ஆற்றில் மேடான பகுதியை உருவாக்கி தூண்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வாறு செயற்கையாக மேடுகள் ஏற்படுத்தப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிப்பு ஏற்படும் எனக் கூறி பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

ஆா்ப்பாட்டம்: இந்நிலையில் எண்ணூா், கத்திவாக்கம் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மீனவா்கள் திருவொற்றியூா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.குப்பன், 7-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கே.காா்த்தி ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை முகத்துவாரப் பகுதியில் திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பைபா் இழை படகுகளில் சென்ற மீனவா்கள் ஆற்றில் பயணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →