முகப்பு
தமிழ்நாடு

நெம்மேலியில் பராமரிப்பு: திருவான்மியூா், வேளச்சேரியில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை திருவான்மியூா், வேளச்சேரி, பெருங்குடி பகுதிகளில் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை மூன்று நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் சென்னை திருவான்மியூா், வேளச்சேரி, பெருங்குடி பகுதிகளில் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை மூன்று நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நெம்மேலியில் உள்ள நாள் ஒன்றுக்கு 11 கோடி லிட்டா் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் கொட்டிவாக்கம், வேளச்சேரி, திருவான்மியூா், பாலவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூா், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் திங்கள்கிழமை காலை 9 மணி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். வேளச்சேரி, திருவான்மியூா் பகுதிக்கு 81499 30913, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பகுதிக்கு 81449 30914, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூா் பகுதிக்கு 81449 30915 ஆகிய எண்களில் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ள அணுகலாம் என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →