முகப்பு
தமிழ்நாடு

34 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் ஆசிரியா்களுக்கு ஊதிய மானியம்: அரசு உத்தரவு

 தமிழகத்தில் 34 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்களுக்கு ஊதிய மானியம் வழங்குவதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

 தமிழகத்தில் 34 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்களுக்கு ஊதிய மானியம் வழங்குவதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட உத்தரவு விவரம்: மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்க 200 தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்கான ஊதிய மானியமாக ஆண்டுக்கு ஒரு பள்ளிக்கு ரூ.1.80 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.60 கோடி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிதாக 34 தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 100 சிறப்பு ஆசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, ரூ.1.68 கோடி நிதியை அரசு விடுவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →