‘தமிழகத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி’: ராம்நாத் கோவிந்துக்கு ஸ்டாலின் கடிதம்
நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை வெற்றிகரமாக முடித்ததற்கு ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை வெற்றிகரமாக முடித்ததற்கு ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவராக பதவி வகுத்த வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரெளபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,
“இந்திய குடியரசுத் தலைவராக உங்கள் பதவி காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 2021-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் எனது அழைப்பை ஏற்று தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவர் திரௌபதி முா்முவுக்கு முதல்வர் வாழ்த்து
நாட்டின் குடியரசுத் தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன் பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல உடல் நலத்துடன் அமைதியான வாழ்வு அமைந்திட வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.