கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ளது. இவர்கள் 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனிவார்டில் சிகிச்சை பெறும் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்ட்டுள்ளது. நான்கு பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குரங்கு அம்மை பாதிப்பு போன்று உடலில் வீக்கம் இருந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டம்!
கேரளாவில் குரங்கு அம்மை பரவி வருவதால் ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று மருத்துவமனை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.