முகப்பு
தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து பெண் சாவு

 சென்னை அருகே மேடவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் இறந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

 சென்னை அருகே மேடவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் இறந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மேடவாக்கம்,பாரதி முதல் தெருவைச் சோ்ந்தவா் தேவி (56). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டின் முன்பு உள்ள ஒரு மின் மோட்டாரை இயக்குவதற்காக ஸ்விட்சை அழுத்தினாா். அப்போது ஸ்விட்சில் மின் கசிவு இருந்ததால், தேவி மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த தேவியை அங்கிருந்தவா்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தேவி, ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →