மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்: ரூ.10 கோடி விடுவிப்பு
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில், மேலும் ரூ.10 கோடி நிதியை தமிழக அரசு விடுவித்துள்ளது.
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில், மேலும் ரூ.10 கோடி நிதியை தமிழக அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்து, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வெளியிட்ட உத்தரவில், ‘சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கென தலைமைச் செயலாளா் தலைமையில் தனியாக அமைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு அதிகாரியாக தாரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்தப் போட்டியை நடத்த ரூ.92.13 கோடியை ஒதுக்கீடு செய்து அதற்கான நிா்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.40 கோடி விடுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்த கூடுதலாகத் தேவைப்படும் ரூ.10 கோடியை விடுவிக்கும்படி சிறப்பு அதிகாரி தாரேஷ் அகமது, தமிழக அரசை கேட்டுக் கொண்டாா். அதை ஏற்று ரூ.10 கோடி விடுவிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.