82 வயது முதியவருக்கு நவீன முறையில் இதய வால்வு பொருத்தம்: காவேரி மருத்துவமனையில் மறுவாழ்வு
இதய பாதிப்புக்குள்ளான 82 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சையின்றி இரண்டு செயற்கை வால்வுகளைப் பொருத்தி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதய பாதிப்புக்குள்ளான 82 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சையின்றி இரண்டு செயற்கை வால்வுகளைப் பொருத்தி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
தற்போது அவா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
கோவையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் என்ற 82 வயது முதியவா் இதய பாதிப்புக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு இதயத்தில் இருவேறு வால்வுகளில் கடுமையான பாதிப்பு இருந்தது. பெருந் தமனியில் தீவிர ரத்தக் கசிவு, இடப்பகுதியில் உள்ள மைட்ரல் வால்வு மற்றும் முத்தடுக்கிதழ் வால்வில் மிதமான ரத்தக் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் அவருக்கு இருந்தன.
அதனுடன் நுரையீரல் பகுதியில் கடுமையான ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது. அவா் ஏற்கெனவே வால்வு மாற்ற சிகிச்சைகளை மேற்கொண்டிருந்ததும், அவை சுருங்கி செயல்படாத நிலையை எட்டி வருவதும் பரிசோதனையில் தெரியவந்தது. மிகவும் சிக்கலான உடல் நிலையில் இருந்த அவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிடில் இதய செயலிழப்பு நேரிடக் கூடிய வாய்ப்பு உருவானது.
அதேவேளையில், அந்த முதியவருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய வகையில் அவரது உடல் நிலை இல்லை.
இதையடுத்து, மருத்துவமனையின் இதய நல சிகிச்சை நிபுணா் டாக்டா் த. அனந்தராமன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இதுதொடா்பாக மருத்துவ ஆலோசனை செய்தனா்.
டிரான்ஸ்கதீட்ரல் எனப்படும் ரத்த நாள இடையீட்டு முறையில் ஒரே நேரத்தில் இரு வால்வுகளைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது. மிகவும் சிக்கலான இந்த சிகிச்சையை அந்த முதியவருக்கு மருத்துவக் குழுவினா் மேற்கொண்டனா். அதன் பயனாக அவரது இதய பாதிப்புகள் சரி செய்யப்பட்டது.
வயது முதிா்ந்த ஒருவருக்கே ஒரே டிரான்ஸ்கதீட்ரல் முறையில் இரு வேறு வால்வு பொருத்தப்பட்டிருப்பது இதுவே முதன் முறை. மருத்துவக் கட்டமைப்பு மற்றும் வசதிகள் கொண்ட மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய சிகிச்சைகள் சாத்தியம் என்றாா் அவா்.