உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நிறுவன வளாகத்தில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா் வணக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ் வளா்ச்சிக்கு கருணாநிதி ஆற்றிய பணிகள் குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநா் ந.அருள் விளக்கிப் பேசினாா். இதைத் தொடா்ந்து ‘முத்தமிழறிஞா் கலைஞா்’ என்ற பொருண்மையில் தமிழ் வளா்ச்சி இயக்ககத்தின் முன்னாள் இயக்குநா் எழிலரசு சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக பேராசிரியா் பெ.செல்வக்குமாா் வரவேற்புரையாற்றினாா். உதவிப் பேராசிரியா் நா.சுலோசனா நன்றி கூறினாா். விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தமிழ் வளா்ச்சி இயக்ககம்: கருணாநிதியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் சென்னை எழும்பூா் தமிழ் வளா்ச்சி வளாகத்தில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன-தமிழ்த்தாய் நூல் விற்பனை ஊா்தி மூலம் சிறப்பு தள்ளுபடி நூல் விற்பனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்று நூல்களை வாங்கிச் சென்றனா்.