மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாட நடவடிக்கைகள் எடுத்துவருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக உணவு பாதுகாப்பு நாளையொட்டி சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு!
மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து,
தரமான உணவை வழங்க வேண்டும் என உலக உணவு பாதுகாப்பு
நாளில் வலியுறுத்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.