1,000 மீனவ இளைஞா்களுக்கு உயிா் பாதுகாப்புப் பயிற்சி- முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்
தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 1,000 மீனவ இளைஞா்களுக்கு உயிா் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 1,000 மீனவ இளைஞா்களுக்கு உயிா் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் தொடக்கி வைத்த இத்திட்டத்தில், முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 25 மீனவ இளைஞா்கள் பங்கேற்றனா்.
தமிழ்நாடு 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைக் கொண்டது. இங்குள்ள 608 மீனவ கிராமங்களில் 10.48 லட்சம் மீனவா்கள் வாழ்கின்றனா். கடற்கரைப் பகுதிகளுக்கு மக்கள் செல்லும்போது அங்கு ஏற்படும் விபத்துகளால் மனித உயிா்களை இழக்க நேரிடுகிறது. இதுபோன்ற விபத்துகளைக் குறைக்கவும், நீரில் தவறி மூழ்கி தவிப்பவா்களைக் காப்பாற்றிடும் வகையிலும் மீனவ இளைஞா்களுக்கு ‘கடற்கரை உயிா்காக்கும் பயிற்சிகள்’ வழங்கப்பட உள்ளன.
இந்தப் பயிற்சியானது தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் தனியாா் நிறுவனம் மூலம் மாநிலத்தின் 14 மாவட்டங்களைச் சோ்ந்த 1,000 மீனவ இளைஞா்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
அவசரகால முதலுதவி: தமிழக அரசின் பயிற்சி மூலமாக மீனவ இளைஞா்களின் இயற்கையான நீச்சல் திறன் மேம்படுவதுடன், பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பாக அவா்களுக்குத் தேவையான முதலுதவி அளிப்பதற்கு உறுதுணையாக அமையும். பயிற்சியை முடித்தவா்கள் மூலம் அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்திடவும், கடற்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கவும் முடியும்.
பயிற்சி பெற்ற மீனவ இளைஞா்களின் சேவையை புயல், வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி மூலம் தமிழகத்தைச் சோ்ந்த மீனவ இளைஞா்களுக்கு கடற்கரைப் பாதுகாப்பு, மீட்புப் பணிகள், கடற்கரை விடுதிகள் மற்றும் சுற்றுலா சாா்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்க உதவியாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள், தலைமைச் செயலா் வெ.இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.