தமிழ்நாடு

சாலையில் சென்று கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு பைக் திடீரென பற்றி எரிந்தது: சென்னையில் பரபரப்பு

DIN

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் சாலை வழியாக புதன்கிழமை காலை இளைஞர் ஒருவர் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். 

அப்போது, திடீரென பைக் அதிகமாக வெப்பமாவதை உணர்ந்த அந்த இளைஞர், உடனடியாக பைக்கை சாலையோரமாக நிறுத்திய அடுத்த சிறிது நேரத்திலேயே பைக் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அருகிலிருந்த உணவகத்தில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றார். அங்கு இருந்த பொதுமக்களும் பைக்கில் தண்ணீரை ஊற்றினர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை.

இந்நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT