தமிழ்நாடு

புதுச்சேரி திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம்: ஆளுநர், முதல்வர் வடம்பிடித்து தொடங்கி வைப்பு

DIN

புதுச்சேரி  மாநிலம், வில்லியனூரில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயில் திருத்தேரோட்ட உற்சவம் சனிக்கிழமை காலை 7.30 மணி அளவில் தொடங்கி நடைபெறுகிறது.

தேரோட்டத்தை புதுவை துணை நிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன்,  முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம்,  வேளாண் அமைச்சர் தேனி சி. ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து திருத்தேர் வீதி உலாவினை தொடங்கி வைத்தனர்.

சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு வழிபட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர்.

எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர், அதிகாரிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

திருத்தேரில் திருக்காமேஸ்வரர், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனையடுத்து கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT