முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தில்லி செல்கிறார்!

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் பரபரப்பான சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கள்கிழமை தில்லி செல்கிறார்.

Updated On : 13 ஜூன், 2022 at 8:56 AM
தமிழக ஆளுநர் ரவி
பகிர்:

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் பரபரப்பான சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கள்கிழமை தில்லி செல்கிறார்.

நமது இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது திமுக மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை  இரவு 9 மணிக்கு விமானத்தில் தில்லி செல்கிறார்.  நாளை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் சூழலில், ஆளுநர் ரவி தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.