தமிழ்நாடு

பள்ளிகொண்டா அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து ஒருவர் பலி, 6 பேர் காயம்

DIN


வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். பைபாஸ் சாலையில் டீ கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், குடும்பத்தோடு காரில் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திங்கள்கிழமை வாணியம்பாடி நோக்கி வந்துகொண்டிருந்த போது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே அகரம்சேரி விநாயகபுரம் பகுதியில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள நிலத்தில் புகுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணித்த 60 வயது கர்பகம் என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 3 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிகொண்டா காவல் துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இவ்விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT