முகப்பு
தமிழ்நாடு

ஒற்றைத் தலைமை சர்ச்சை: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சை வெடித்துள்ள நிலையில் தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:32 AM
ஒற்றைத் தலைமை சர்ச்சை: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்
பகிர்:

அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சை வெடித்துள்ள நிலையில் தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் ஜூன் 23-இல் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. முன்னதாக அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் பெரும்பாலான மாவட்டச் செயலாளா்கள் வலியுறுத்தினா்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.

அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை சர்ச்சை தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →