முகப்பு
தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வை அளிக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Updated On : 16 ஜூன் 2022, 6:08 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு 14% இருந்து 28% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பணியாற்றும் 19,658 விற்பனையாளர்கள், 2,852 கட்டுநர்கள் பயன்பெறுவர்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு கோரி ரேஷன் கடை ஊழியர்கள் போரட்டம் நடத்திய நிலையில் அரசு நடவடிக்கை எடுத்து அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments