முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:32 AM
பகிர்:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து 'ஒற்றைத் தலைமை' விவகாரம் குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

இன்று எடப்பாடி கே. பழனிசாமி சேலம் சென்றுள்ள நிலையில் ஓபிஎஸ் தனது வீட்டில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

அதேநேரத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதிக்க இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயக்குமார், செம்மலை, வைகைச் செல்வன், வளர்மதி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 11 பேர்  கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

இதன்பின்னர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ள ஓபிஎஸ், கட்சி  நிர்வாகிகளுடன் பொதுக்குழு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →