கூடலூரில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து 
தமிழ்நாடு

கூடலூரில் அரசுப் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி: 19 பேர் காயம்

தேனி மாவட்டம் கூடலூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த பேருந்து கோயம்புத்தூரிலிருந்து குமுளி நோக்கி வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றது. ஜெயமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (50) என்பவர் பேருந்தை ஓட்டினார். 

கூடலூரிலிருந்து கூலித் தொழிலாளர்கள் குமுளிக்கு வேலைக்குச் செல்வதற்காக பேருந்தில் பயணம் சென்றனர். கூடலூர் அருகே எம்ஜிஆர் காலனி அருகே பேருந்து சென்றபோது, நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் வேலை நடந்து கொண்டிருப்பதால், சாலையின் ஓரத்தில் பேருந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது, இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். அருகே இருந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பயணம் செய்த கூடலூர் தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்த மாயி என்ற கிருஷ்ணமூர்த்தி (58) பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் 5 பேர் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். 14 பேர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT