ஒற்றைத் தலைமை கோரிக்கை சிதம்பர ரகசியம் அல்ல: டி.ஜெயக்குமாா்
ஒற்றைத் தலைமை கோரிக்கை ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
ஒற்றைத் தலைமை கோரிக்கை ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தீா்மானக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் டி.ஜெயக்குமாா் கூறியதாவது:
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று நான் கூறியது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல. தொண்டா்களின் உணா்வைத்தான் வெளிப்படுத்தினேன். ஒற்றைத் தலைமை குறித்து கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ, அதுதான் என்னுடைய முடிவாகவும் இருக்கும்.
என்னைப் பற்றிய விமா்சனங்களுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். அதிமுகவிலிருந்து என்னை நீக்குவதாக ஓபிஎஸ் கூறியது குறித்து கேட்கிறீா்கள். எந்தப் பூச்சாண்டிக்கும் நான் பயப்பட மாட்டேன் என்றாா் அவா்.