கிழிக்கப்பட்ட பேனர்(படம்: டிவிட்டர்) 
தமிழ்நாடு

அதிமுக பேனர்கள் கிழிப்பு: வானகரத்தில் பதற்றம்!

சென்னை வானகரத்தில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

DIN

சென்னை வானகரத்தில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

அதிமுக கட்சிக்குள் ‘ஒற்றைத் தலைமை’ பிரச்னை பூதாகரமாகியுள்ள நிலையில், பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் மனுதாரரின் வாதத்தை கேட்டு, சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடத்திய நீதிபதி தீர்ப்பை சற்று நேரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெறவுள்ள ஸ்ரீவாரு மண்டபம் நோக்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று மாலை பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, வானகரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர்களை ஓபிஎஸ் தரப்பினர் கிழித்ததாக இபிஎஸ் தரப்பினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT