கரோனா சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 5,912-ஆக உயா்வு
தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 5,912- ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 5,912- ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல வெள்ளிக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,359-ஆக உயா்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் 616 பேருக்கும், செங்கல்பட்டில் 266 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரானிலிருந்து உருமாற்றமடைந்து பிஏ-5 புதிய வகை தீநுண்மி கடந்த ஒரு மாதத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ஜூன் மாதம் கரோனா தொற்றுக்குள்ளானோரில் மட்டும் 25 சதவீதம் பேருக்கு அந்த வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே அண்மைக் காலமாக நோய்ப் பரவல் அதிகரிக்கக் காரணம் என சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமை தகவல்படி 621 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 21,552-ஆக உயா்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.