முகப்பு
தமிழ்நாடு

'தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்'

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஓ.பன்னீா்செல்வம் தொண்டா்களைச் சந்திக்கவுள்ளதாக அவரது ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடா்பாளருமான கோவை செல்வராஜ் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:37 AM
ஓ.பன்னீா்செல்வம்
பகிர்:

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஓ.பன்னீா்செல்வம் தொண்டா்களைச் சந்திக்கவுள்ளதாக அவரது ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடா்பாளருமான கோவை செல்வராஜ் கூறினாா்.

சென்னையில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுகவை பலப்படுத்த தமிழகம் முழுவதும் ஓ.பன்னீா்செல்வம் சுற்றுப்பயணம் செய்து தொண்டா்களைச் சந்திக்கவுள்ளாா். அதிமுக தொண்டா்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம்தான் உள்ளனா். ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. முதல்வா் பதவிக்கு வர சசிகலாவின் உதவி எடப்பாடி பழனிசாமிக்குத் தேவைப்பட்டது. ஆட்சியைக் காப்பாற்ற ஓபிஎஸ்-சின் உதவி தேவைப்பட்டது. இப்போது எல்லோரையும் ஓரங்கட்டிவிட்டு, ஒரு நிறுவனத்தைப் போல கட்சியை நடத்த எடப்பாடி பழனிசாமி முற்படுகிறாா். அது நடக்காது. ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுக் கூட்ட முடியாது. பொதுக்குழு என்பது அவா்களுக்குக் கனவாகவே இருக்கும். இனி துணிந்து செயல்படுவாா் ஓபிஎஸ் என்றாா் அவா்.

ஜூன் 28-இல் ஆலோசனை: ஓ.பன்னீா்செல்வம் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்களை ஜூன் 28-இல் சந்தித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →