தமிழ்நாடு

தலைமுடியைத் திருத்தச் செய்த தலைமையாசிரியர்! ஆச்சரியத்தில் புள்ளிங்கோ...

DIN

வேலூர் ஊரீசுப்பள்ளியில் தலைமுடியை ஸ்டைலாக வெட்டி வந்த புள்ளிங்கோக்களுக்கு - தலைமுடியை சீர்திருத்தி ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். 

வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஊரீசுப்பள்ளி. இப்பள்ளியில் மாணவர்கள் பலரும் தலைமுடியை சரியாக வெட்டி வருவதில்லை எனவும், மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் ஒழுக்கமாக சீருடை அணிந்து தலைமுடியை வெட்டியிருக்க வேண்டுமென்ற மாவட்ட ஆட்சியரின் சுற்றறிக்கையின் படி, மாணவர்கள் பெரும்பாலானோர் தலைமுடியை சரியாக வெட்டாமல் பல புள்ளிங்கோ கட்டிங்க், ஸ்பைக் கட்டிங்க் என விதவிதமான ஸ்டைல்களில் முடியை வெட்டிவந்தனர்.

முடியை வெட்டாமலும், விதவிதமான ஸ்டைலில் முடியை வெட்டி வந்த மாணவர்கள் 65 பேரை கண்டறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் எபினேசர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அவர்களை எச்சரித்து அறிவுரை வழங்கினர். 

பின்னர், தலைமை ஆசிரியர் எபினேசர் தனது சொந்த செலவில் முடிதிருத்துபவர்களை பள்ளிக்கு வரவழைத்து ஸ்டைலாக தலைமுடியை வெட்டியிருந்த மாணவர்களின் தலைமுடியை சீர்திருத்தனர்.

இதையும் படிக்க | மணப்பாறை நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் அதிமுக கவுன்சிலர்!
 
இதுகுறித்து தலைமை ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவர்கள் தலைமுடியை சரியாக வெட்டாமல் வந்துள்ளனர். ஒழுக்கமாக மாணவர்கள் இருக்க வேண்டும். ஒழுங்காக தலைமுடியை வெட்ட வேண்டும் என அறிவுரையை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி அவர்களின் தலைமுடியை சீர்திருத்தினோம். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கும் அறிவுரை வழங்கவுள்ளதாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT