முகப்பு
தமிழ்நாடு

ஆற்காட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினின்  பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை ஆற்காடு அண்ணாசிலை அருகில் கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினின்  பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை ஆற்காடு அண்ணாசிலை அருகில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திமுக நகர செயலாளர் ஏ.வி. சரவணன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் பொன். ராஜசேகர், தொழிலதிபர் ஏ.வி. சாரதி, பொதுக்குழு உறுப்பினர் பி. என்,எஸ். ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கட்சியின் நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →