சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் ராஜஸ்தானை சேர்ந்த யஸ்பால்(வயது 26) கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த யஸ்பால், இன்று காலை கழிவறைக்குள் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சென்னை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.