தமிழகத்தில் மேலும் 223 பேருக்கு கரோனா
தமிழகத்தில் மேலும் 223 பேருக்கு கதமிழகத்தில் மேலும் 223 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.ரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 223 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 51,796 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 223 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 67 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 29 பேரும், செங்கல்பட்டில் 23 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மற்றொருபுறம் மேலும் 596 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 09,674-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 3,131 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 1 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,012-ஆக அதிகரித்துள்ளது.