கரோனா: சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 3,131-ஆகக் குறைந்தது
தமிழகத்தில் சனிக்கிழமை கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 3,131-ஆகக் குறைந்திருந்தது.
தமிழகத்தில் சனிக்கிழமை கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 3,131-ஆகக் குறைந்திருந்தது. அன்றைய தினம், புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும் 223-ஆகக் குறைந்திருந்தது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 67 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 29 பேரும், செங்கல்பட்டில் 23 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.
மற்றொருபுறம் மேலும் 596 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பினா். இதனிடையே சனிக்கிழமை மேலும் ஒருவா் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,012-ஆக அதிகரித்திருந்தது.