‘கண்ணீர் மல்க நன்றி’: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கம் 
தமிழ்நாடு

‘கண்ணீர் மல்க நன்றி’: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு அவரது தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

DIN

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு அவரது தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் ஜாமீன் வழங்கக் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது சுட்டுரைப் பக்கத்தில், “அறிவின் 31 ஆண்டு சிறை, நன்னடத்தை, சிறையில் பெற்ற கல்வி, உடல்நிலை ஆகியன கருதி பிணை வழங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இதற்காக துணை நின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகேஷ் திவேதி, கோபால் சங்கரநாராயணன் ஆகியோருக்கு கண்ணீர் மல்க நெஞ்சார்ந்த நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுத்தமான வீடு அனைவரது கனவு! அது நனவாக நல்ல யோசனைகள்!!

2021 டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி. வீரர் ஓய்வு..! ரசிகர்கள் அதிர்ச்சி!

100 நாள்களை நிறைவு செய்த ஆக்‌ஷன் சீரியல்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தானின் அபார பந்துவீச்சில் 110 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!

SCROLL FOR NEXT