தமிழ்நாடு

ட்ரோன் மூலம் இடுபொருள் தெளிப்பு: நிதிநிலை அறிக்கை

DIN

ட்ரோன் மூலம் இடுபொருள் தெளிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

வேளாண்மையில் ஆள் பற்றாக்குறையைச் சமாளித்து இடுபொருள்களை துல்லியமாக தெளித்து, தமிழக வேளாண்மையில் ட்ரோன்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள், வேளாண் பயிற்சி நிலையங்களில் ட்ரோன் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளித்து, விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் 2022-2023-ஆம் ஆண்டில் மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கல் கிசான் ட்ரோன் திட்டத்தின் கீழ் ரூ.10.32 கோடி செலவில் 60 ட்ரோன்களின் மூலம் சுமாா் 14,400 ஹெக்டோ் பரப்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் செயல்விளக்கம் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT