கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் கடற்கரையில் ஆளில்லா இலங்கைப் படகு ஒன்று கரை ஒதுங்கி இருப்பது ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.20) தெரிய வந்தது.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் கடற்கரையில் ஆளில்லா இலங்கைப் படகு ஒன்று கரை ஒதுங்கி இருப்பது ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.20) தெரிய வந்தது.
இலங்கையைச் சேர்ந்த ஆளில்லா கண்ணாடியிழைப் படகு குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார், கியூ பிரிவு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.