முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.14 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

துபையிலிருந்து நேற்று சென்னை வந்த கேரளத்தைச் சேர்ந்த பயணி ஒருவரை சோதனையிட்டதில், அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 72.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.486 கிலோகிராம் எடையிலான தங்கம் கைப்பற்றப்பட்டது. 

அதே போன்று இன்று ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த மற்றொரு பயணி கடத்தி வந்த 42.51 லட்சம் ரூபாய் மதிப்பிலான 880 கிராம் எடையிலான தங்கமும் கைப்பற்றப்பட்டது. 

இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →