ரமலான் பண்டிகையையொட்டி சங்ககிரி, பால்வாய் பகுதியில் உள்ள ஈதுகா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை  சிறப்பு தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள்.  
தமிழ்நாடு

சங்ககிரி: ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சங்ககிரியில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். 

DIN


சங்ககிரி: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சங்ககிரியில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். 

சங்ககிரி, சங்ககிரி ஆர்.எஸ்., சங்ககிரி மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் திருநாளையொட்டி நோன்பு இருந்து தொழுகை நடத்தி வந்தனர். 

அதனையடுத்து திங்கள்கிழமை  பிறை தெரிந்ததையடுத்து அரசு தலைமை காஜி அறிவித்த பின்னர் செவ்வாய்க்கிழமை ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் கூறி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

பின்னர் சங்ககிரி மலையடிவாரம் முஸ்லிம் தெருவிலிருந்து  பழைய, புதிய எடப்பாடி சாலைகள், சந்தைபேட்டை வழியாக தக்பீர் ஓதியபடி பால்வாய் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாகச் சென்று சிறப்புத் தொழுகை  செய்தனர். 

சங்ககிரி, பால்வாய் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் பண்டிகையையொட்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட நகரின் முக்கிய வீதிகளில் தக்பீர் ஓதியபடி செல்லும் இஸ்லாமியர்கள்.

அரசு காஜி முஹம்மதுஉவைஸ் ரமலான் சிறப்புத் தொழுகையின் சிறப்புகள் குறித்து தமிழில் விளக்கிக் கூறினார்.  

இதே போல் சங்ககிரி பயணியர்விடுதி சாலையில் உள்ள மஸ்ஜிதுல் மனார் பள்ளிவாசல், முஸ்லீம் தெருவில் உள்ள மொஹல்லா பள்ளிவாசல், சங்ககிரி கண்ணம்பாளி காடு உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT