முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 37 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழ்நாட்டில் புதிதாக 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. 15,811 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 37 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 58 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றும் தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

இதுவரை மொத்தம் 34,15,603 பேர் குணமடைந்துள்ளனர். 

இன்றைய நிலவரப்படி 467 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களில் சென்னையில் அதிகளவாக 23 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.