தமிழ்நாடு

இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமம்; முதல்வர் அறிவிப்பு

வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமை பெற்றால் போதும் என்று  திருச்சி வணிகர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DIN

திருச்சி: வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமை பெற்றால் போதும் என்று  திருச்சி வணிகர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சி வணிகர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வணிகர்களுக்கு சாதகமாக ஜிஎஸ்டி மன்றத்தில் வரிச்சலுகைகளையும், சில வரிகள் கைவிடுதலையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுவரை 65 வரிகளை மாநில அரசு கைவிட்டுள்ளது.

தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5000 வழங்கப்பட்டடு வந்தது. அது இனி ரூ.20,000 மாக வழங்கப்படும்.  வணிகர் உயிரிழந்தால் நலவாரியம் சார்பில் வழங்கப்பட்டுவந்த ரூ.1 லட்சம் இழப்பீடு, இனி ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமை பெற்றால் போதும். இனி உடற்பயிற்சி கூடங்களுக்கு காவல் உரிமம் தேவையில்லை. 

சாலை விரிவாக்கத்தின் போது பாதிக்கப்படும் வணிகர்களுக்கு, உள்ளாட்சி அமைப்பு வாடகை கட்டிடங்களை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு கட்டடங்களில் வணிகர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ய தனியாக கமிட்டி அமைக்கப்படும். 

வணிகர் நல வாரியத்தை மேம்படுத்த பேரமைப்பு நிர்வாகிகளை கொண்ட புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். திமுக ஆட்சி எப்போதும் வணிகர் நலன் பேணும் அரசாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை: அஜித் பவார்

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

ஓய்வை அறிவித்தார் புஜாரா!

சில நேரங்களில் சினிமா என்பது... சௌபின் சாகிர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT