முகப்பு
தமிழ்நாடு

பொதுத் தேர்வு அறையில் முகக்கவசம் கட்டாயமில்லை

தேர்வு அறையில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
ராதாகிருஷ்ணன் விளக்கம்
பகிர்:

தேர்வு அறையில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம், புதுவையில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு 3,119 மையங்களில் இன்று தொடங்கவுள்ளது. இந்தத் தோ்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

இதற்கிடையே, மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் சுற்றறிக்கை வெளியானது. இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் பெயரில் வெளியான அறிக்கை போலியானது என்றும், மாணவர்கள் தேர்வு அறையில் முகக்கவசம் அணிவது கட்டாமில்லை என்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →