செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கரோனா
செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அம்மாபேட்டை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் முதற்கட்டமாக 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக சென்னை ஐஐடியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.